உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓடுதளத்தில் உராய்ந்த இண்டிகோ விமானம்

ஓடுதளத்தில் உராய்ந்த இண்டிகோ விமானம்

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு 186 பயணியருடன் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1:47 மணிக்கு சென்னை விமான நிலையத்தில்தரையிறங்கியது.அப்போது விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் ஓடுபாதையில் விமானத்தின் வால் பகுதி உராய்ந்த படி சென்றது. இதனால் தீப்பொறி ஏற்பட்டது.உள்ளே இருந்தபயணியர் அனைவரும் அச்சமடைந்தனர்.சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியால் விமானம் அதிக சேதமின்றி குறிப்பிட்ட இடத்தில் நின்றது. இதன் காரணமாகவிமானத்தில் இருந்த 186பயணியர், எட்டு விமான ஊழியர்கள் உட்பட 194 பேர் உயிர் தப்பினர்.இந்நிலையில்டில்லியில் உள்ளவிமானப் போக்குவரத்துஇயக்குநரகத்துக்குபயணியர் வாயிலாக புகார் சென்றது. அவர்கள் விசாரணைக்குஉத்தரவிட்டனர்.சேதமடைந்த விமானத்தை முழுமையாக சீரமைத்து, தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்பே, மீண்டும்பயணியர் சேவைக்கு பயன்படுத்த வேண்டும்என்று, உத்தரவுபிறப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி