நான்கு மாதமாச்சு; சம்பளம் என்னாச்சு
கொட்டாம்பட்டி : தும்பைபட்டி ஊராட்சி சாலைக்கிபட்டி, லட்சுமிபுரம், தாமரைபட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர். வார கடைசியில் நாள் ஒன்றுக்கு ரூ.250 சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் 4 மாதங்களாக வரவு வைக்கப்படவில்லை. இதனால் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அரசுக்கு சம்பளம் விபரம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றனர்.