இடம் தேடும் குன்றத்து போலீசார்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் போலீஸ் ஸ்டேஷன் புதிதாக உருவாக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் 29 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டேஷன் முழுமையாக இயங்க வாடகை கட்டடத்தை போலீசார் தேடி வருகின்றனர். தாமதமாகும் பட்சத்தில் தற்போது கோயிலுக்கு முன்பு செயல்படும் போலீஸ் அவுட்போஸ்ட்டை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.