விண்வெளி தினம்
மேலுார்: மேலுார் தெற்குத்தெரு வைகை பொறியியல் கல்லுாரியில் முதல் தேசிய விண்வெளி தினம், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் மாணவர் தொழில்நுட்ப சங்கம் துவக்க விழா நடந்தது. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்ரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். விண்வெளி தொடர்பாக மாணவர்களின் செயல்முறை மாதிரிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.