உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சம்பளமின்றி 108 ஓட்டுநர்கள்

 சம்பளமின்றி 108 ஓட்டுநர்கள்

மதுரை: மதுரையில், '108' ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் 7000 பேருக்கு ஜனவரிக்குரிய சம்பளம் வழங்கப்படாதது குறித்து அமைச்சர் சுப்பிர மணியனிடம் '108' ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி மனு அளித்தார். அவர் கூறியதாவது: 2024ல் வழங்கிய 16 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை 2025ல் 10 சத வீதமாக அரசு குறைத்தது. 8 மணி நேரம் கடந்தும் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்துகின்றனர். 4 மாதங்களாக சம்பளத்தை பாதி பாதியாக பிரித்து வழங்கினர். ஜனவரிக் குரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. முதல்வர் புகார் மையத்திற்கு 4000 பேர் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. பிப்.13ல் பேரணி யாக செல்ல திட்ட மிட்டுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ