ஆலோசனை
கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி பெரியாறு பாசன கால்வாய் நீட்டிப்பு, விவசாயிகள் வாழ்வாதார இயக்கம் சார்பில் நீர் பாசன பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு மழை நீரை மட்டுமே நம்பி உள்ளனர். எனவே பெரியாறு பாசன கால்வாயை இப்பகுதிக்கு விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது. கேசம்பட்டி, பட்டூர், பள்ளபட்டி உள்ளிட்ட 16 கிராம மக்கள் பங்கேற்றனர்