சிப்காட் எதிர்ப்பு பொங்கல் வழிபாடு
கொட்டாம்பட்டி: வஞ்சி நகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலத்தில் 278 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று கல்லங்காடு பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன், சிவன் கோயில் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிப்காட்டை தடை செய்ய வலியுறுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கும்மி கட்டி நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.