உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் ஸ்டிரைக்கிற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

பஸ் ஸ்டிரைக்கிற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை : அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இன்று (ஜன.9) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் ஆர்.விஜயகுமார் அமர்வு முன் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆஜராகி முறையிட்டதாவது: காலியாக உள்ள டிரைவர் கன்டக்டர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் இன்று (ஜன. 9) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை. பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியாக சட்டப்பூர்வ வழிகளில் தீர்வு காண வேண்டும். வேலை நிறுத்தம் ஒரு ஆயுதமாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேலைநிறுத்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என மனு செய்துள்ளேன். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.இவ்வாறுகுறிப்பிட்டார்.நீதிபதிகள் இன்று (ஜன.9) விசாரிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ