பல்கலையில் தீக்குளிக்க முயற்சி
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை எலக்ட்ரீசியன் சிவா 2022 ல் இறந்தார். அவருக்கான பணப்பலன்களை குடும்பத்திற்கு பல்கலை வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த மாமனார் நாகராஜன், மாமியார் சுசீலா நேற்று பல்கலையில் காமராஜ் சிலை அருகே தீக்குளிக்க முயன்றனர். ஊழியர்கள் தடுத்தனர். அவர்களிடம் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் பேசி விரைவில் பணப்பலன்களை வழங்குவதாக உறுதியளித்தார்.