உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ளலுார் நாட்டில் வெற்றிலை பிரி திருவிழா

வெள்ளலுார் நாட்டில் வெற்றிலை பிரி திருவிழா

மேலுார்: வெள்ளலுாரில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு உழவு பணிகள் துவங்கப்பட்டன.'வெள்ளலுார் நாடு' என்று அழைக்கப்படும் 60 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்கள் தலைமையில் நேற்று கிராம மக்கள் மந்தை கருப்பண சுவாமி கோயில் மந்தையில் ஒன்று கூடினர். அதைதொடர்ந்து ஒரு பிரிவினர் தங்கத்தால் ஆன கொழுவை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து தரையில் உழுது சுவாமி கும்பிட்டனர். பின்னர் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்களுக்கும், அவர்கள் அந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர். வெற்றிலையை பெற்றவர்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சுவாமி கும்பிட்ட பிறகு வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர்.தும்பைப்பட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு அம்பலகாரர்கள் தலைமையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு முஸ்லிம்கள் வெற்றிலையை பிரித்து கொடுத்தனர். ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் எல்லா வளமும் கிடைக்க வேண்டியும் இத்திருவிழா கொண்டாடப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை