கட்டட தொழிலாளி கொலை
மேலுார்: நொண்டி கோவில்பட்டி கம்பர் தெரு மணிமாறன் 26. கட்டட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளிகள் செக்கடி பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதால் மணிமாறனும் அதிகாலை 5:00 மணி அளவில் அப்பகுதி ஓட்டல் முன் நின்றிருந்தார். அங்கு டூவீலரில் வந்தவர்கள் மணிமாறனை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பினர். உறவினர்கள் பஸ் ஸ்டாண்ட் முன்பு மதுரை - மேலுார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., சிவக்குமார் சமரசம் செய்தார். 5 ஆண்டுகளுக்கு முன் டூவீலரில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.