பாலிதீனால் ஆபத்து
மதுரை : பேரையூர் தாலுகாவில் மேய்ச்சல் நிலங்கள், ஓடைகள், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் அதிக அளவில் குவிந்துள்ளது.மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அதை உட்கொள்ளும் நிலை வரும்போது ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பாலிதீன் பயன்பாட்டை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.