மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் திறக்கப்பட்ட மையம்
17-Mar-2026
சோழவந்தான்: தேனுாரில் லாரிகள் வராததால் மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் தேங்கின. இதனால் அறுவடை செய்த நெல்மணிகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் ஆங்காங்கே விவசாயிகள் குவித்து வைத்தனர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து நெல்மணிகள் முளைவிடும் அபாயம் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து லாரிகளை அனுப்பினர். அப்பகுதி விவசாயிகள் தினமலர் நாளிதழ், அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.
17-Mar-2026