உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி இன்டர்நேஷனல் பள்ளி சாம்பியன்

கல்வி இன்டர்நேஷனல் பள்ளி சாம்பியன்

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நிறுவனர் நாராயணனின் 6வது நினைவு கோப்பை பள்ளிகளுக்கு இடையிலான மாநில கால்பந்து போட்டி நடந்தது.நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகளில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 பள்ளிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி அணி வேலம்மாள் அணியை 3 - -0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல்வர் சந்திரன் பரிசு வழங்கினார். கல்வி இயக்குனர் யுவராஜ் வரவேற்றார். பேராசிரியர் ரேணுகாதேவி நன்றி கூறினார். பேராசிரியர் நாகேஸ்வரி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை