உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுாரியும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையும் இணைந்து உலக மறுசுழற்சி நாள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர். செயல் அலுவலர் முத்துமணி தலைமை வகித்தார். சுற்றுப்புறச் சூழல் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல் துறை அலுவலர் ஜமீல் அஹமத் சான்றிதழ் வழங்கினார். கல்லுாரி முதல்வர் சுடலை மணி, செயல் அலுவலர்கள் காந்திநாதன், மீனாட்சிசுந்தரம் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாண்டியன், ஜெயவேல் முருகன் ஏற்பாடு செய்திருந்தனர். பி.ஆர்.ஓ., பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !