மேலும் செய்திகள்
தீ தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட அலுவலர் தகவல்
5 hour(s) ago
மதுரை: தீ பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த 'வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற ஒரு முயற்சியை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் ஏற்பாட்டில் துவங்கியுள்ளது. பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள 375 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் அக்., 11, 12ல் மக்களுக்கு காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:00 - 5:00 மணி வரை விழிப்புணர்வு வகுப்பு நடத்துவர். இதற்கான ஏற்பாடுகளை தென்மண்டல துணை இயக்குனர் ராஜேஷ்கண்ணன் செய்து வருகிறார்.
5 hour(s) ago