உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் இலவச திருமணங்கள்

குன்றத்து கோயிலில் இலவச திருமணங்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெரிய ஆலங்குளம் சக்திவேல்- தும்பக்குளம் நதியா, கிண்ணிமங்கலம் வினோத்குமார்- தத்தனேரி சுஜித்ரா, திருப்பரங்குன்றம் பிரவீன் பாரத்- வாடிப்பட்டி அருணா, திருப்பரங்குன்றம் ராமச்சந்திரன்- கீர்த்தனா, சென்னை அமிர்தராஜ்- நிலக்கோட்டை துர்கா தேவி ஆகிய ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நேற்று நடந்தது.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா 3 ஜோடிகளுக்கும், அறங்காவலர் மணிச்செல்வம் 2 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம், பட்டுச் சேலை, வேஷ்டி, பட்டுச் சட்டை, கட்டில், பீரோ, பூஜை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மொத்தம் ரூ. 9 லட்சம் மதிப்பில் சீதனமாக வழங்கினர்.துணை கமிஷனர் சூரியநாராயணன், தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் பாலாஜி தலைமையில் மணமக்களுக்கு கோயிலில் திருமணம் நடந்தி வைக்கப்பட்டது. கண்காணிப்பாளர் ரஞ்சனி, பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை