உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவ.28 ல் ஜூனியர் உலக கோப்பை; மதுரை ஹாக்கி அரங்கு ஆய்வு

நவ.28 ல் ஜூனியர் உலக கோப்பை; மதுரை ஹாக்கி அரங்கு ஆய்வு

மதுரை; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவ., 28 ல் ஜூனியர் உலக கோப்பைக்கான ஹாக்கி போட்டி துவங்க உள்ள நிலையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி அரங்கு அமைக்கும் பணிகளை ஹாக்கி இந்தியா செயலாளர் போலோநாத் சிங், தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் ஆய்வு செய்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தலைமையில் நிர்வாகிகள், விளையாட்டுப்போட்டி நிர்வாகிகள் விக்ரம், பூஷன் ஆகியோர் அரங்கை ஆய்வு செய்தனர். பின் போலோநாத் சிங், சேகர் கூறியதாவது : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே இருந்த ஹாக்கி அரங்கின் செயற்கை புல்வெளி தளம் (டர்ப்) அகற்றப்பட்டு சர்வதேச தரத்திற்கேற்ப புதிதாக மாற்றப்பட உள்ளது. போட்டியை பார்வையாளர்கள், வி.ஐ.பி.,க்கள் என 700 பேர் அமர்ந்து காணும் வகையில் மூன்று வகை கேலரி, கழிப்பறை, போட்டி நடுவர்கள், வீரர்களுக்கான அறைகள், உடை மாற்றும் அறைகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாக ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடத்த உள்ளோம். 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 72 போட்டிகளில் பங்கேற்க உள்ளன. மதுரையில் 12, சென்னையில் 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டிகளில் விளையாடும். தென் தமிழகம் ஹாக்கி விளையாட்டுக்கும் வீரர்களுக்கும் பெயர் பெற்றது என்பதால் துணைமுதல்வர் உதயநிதி வேண்டுகோளுக்கிணங்க டிச., 3 ல் இந்திய அணி விளையாடும் ஒரு போட்டியை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம். மொத்தமுள்ள 72 போட்டிகளில் மதுரையில் 34 போட்டிகள், லீக் போட்டிகள் என டிச., 8 வரை மதுரையில் நடத்தப்படும். அரையிறுதி, இறுதிப் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை