உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போக்சோ வழக்கில் ஆயுள்

 போக்சோ வழக்கில் ஆயுள்

மதுரை: மதுரை தத்தனேரி செந்தில்குமார் 43. இவர் ஒரு சிறுமியை கத்தியை காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் உறவு கொண்டதாக தல்லாகுளம் மகளிர் போலீசார் 2017 ல் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரவேல் விசாரித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.7000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண திட்டத்தின் கீழ் அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை