உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடன் ஆவின் வருவாயை முறிக்கும் n பால் பொருட்களை கிரெடிட் முறையில் வழங்க வேண்டாம் n மண்டல அலுவலக வசூல் மோசடியால் முகவர்கள் எதிர்ப்பு

கடன் ஆவின் வருவாயை முறிக்கும் n பால் பொருட்களை கிரெடிட் முறையில் வழங்க வேண்டாம் n மண்டல அலுவலக வசூல் மோசடியால் முகவர்கள் எதிர்ப்பு

மதுரை ஆவினில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் சப்ளை செய்யப்படுகின்றன. இம்முகவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய 5 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதற்காக ஆவின் மேலாளர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த மண்டல அலுவலகங்களில் பால் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் முகவர்கள் அதற்கான பணத்தை அதே மண்டலங்களில் செலுத்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக முகவர்களிடம் வசூலித்த பணம் ஆவினில் செலுத்தப்படாமல் ரூ. பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைத்து பொது மேலாளர் சிவகாமி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து சில மேலாளர்கள் வசூல் பணத்தை ஆவினுக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 'எந்த மாவட்டத்திலும் இல்லாத நடைமுறையாக மதுரையில் மட்டும் பால் பொருட்களை கடன் அடிப்படையில் மண்டல அலுவலகங்களுக்கு வழங்கும் முறையை' ஆவின் நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: பால் பாக்கெட்டுகளுக்கான தொகையை முகவர்களிடம் முன்கூட்டியே ஆவின் பெற்றுக்கொள்கிறது. ஆனால் பால் பொருட்களான நெய், பால்கோவா, மைசூர்பாகு உள்ளிட்ட பொருட்களை மண்டல அலுவலகங்கள் மூலம் முகவர்களுக்கு வழங்குகிறது. அதற்கான விற்பனை பணத்தை மண்டலங்களில் செலுத்துகிறோம். ஆனால் மண்டல அலுவலர்கள் ஆவினுக்கு உரிய நேரத்தில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாக தெரிகிறது.சில மண்டலங்களில் முகவர்கள் பணத்தை செலுத்தவில்லை என மண்டல அலுவலர்கள் தவறான தகவலை சொல்லி தப்பிக்க நினைக்கின்றனர். எனவே பால் பாக்கெட்டுகளுக்கு பெறுவது போல் முன்பணம் பெற்று முகவர்களுக்கு வாகனம் மூலம் நேரடியாக பால் பொருட்களையும் வினியோகிக்க வேண்டும். இதன்மூலம் ஆவினுக்கு உடனே வருவாய் கிடைக்கும். இதுபோன்ற முறைகேடும் தவிர்க்கப்படும் என்றனர்.

கடுமையாக்க வேண்டும்

ஆவின் வசூல் பணத்தில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் நிலையில், வசூல் பணம் ஆவினுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு மண்டலத்தை சேர்ந்த அலுவலர் ரூ.4 லட்சத்தை ஒரே நாளில் செலுத்தியுள்ளார். ஆனால் அவர், இதுவரை வசூல் பணத்தை சொந்த வீடு கட்டுவதற்காக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. நெருக்கடி வரவே பணத்தை செலுத்த முன்வருகிறார். ஆனால் அவர் மீது நடவடிக்கை இல்லை. ஆவின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுத்தால்தான் தவறுகள் நடக்காது. மேலும் 2022 - 2023, 2023 - 2024 ல் அதிக முறைகேடு நடந்துள்ளது. 2024 ம் ஆண்டுக்கு ஆவினுக்கு வரவேண்டிய தொகை அதிகமாக உள்ளது. இவ்வாண்டுகளில் எவ்வளவு பால் பொருட்கள் விற்பனையானது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ