மேலும் செய்திகள்
பெண் கொலையில் இருவருக்கு ஆயுள்
01-Aug-2025
மதுரை: மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி அருகே குடும்பத் தகராறு முன்விரோதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது மதுரை நீதிமன்றம். மீனாட்சிமூப்பன்பட்டி வனராஜ் 63. இவரது மகன்கள் மலைச்சாமி, சதீஷ் 35. மலைச்சாமிக்கு சுமதி என்பவருடன் திருமணம் நடந்தது. தனிக்குடித்தனம் சென்றனர். வனராஜ், சதீஷ் வாங்கிய கடனை அடைக்குமாறு மலைச்சாமியிடம் தகராறு செய்தனர். மலைச்சாமி, சதீஷ் அருகருகே வசித்தனர். இருவர் வீட்டிற்கும் மாடிக்கு செல்ல மலைச்சாமி வீட்டிலுள்ள படிக்கட்டுவை பயன்படுத்த வேண்டும். அதை சுவர் அமைத்து அடைத்து மலைச்சாமி மட்டும் பயன்படுத்தினார். இதனால் பிரச்னை ஏற்பட்டது. 2015 ஆக.6ல் மீனாட்சி மூப்பன்பட்டி பொது சாவடியில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆபாசமாக பேசி வனராஜ் கத்தியால் மலைச்சாமியின் உறவினர் பாஸ்கரனை குத்த வந்தார். பாஸ்கரனை பின் பக்கமாக சதீஷ் பிடித்துக் கொண்டார். வனராஜ் குத்தினார். கட்டையால் சதீஷ் தாக்கினார். பாஸ் கரன் இறந்தார். எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜரானார். வனராஜ், சதீஷிற்கு தலா ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.
01-Aug-2025