போட்டியிடாத கட்சிகள் விளக்கமளிக்க உத்தரவு
மதுரை; மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அனைத்திந்திய பார்வர்டு பிளாக் (சுபாஷிஸ்ட்), அனைத்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அனைத்து மக்கள் நீதிக்கட்சி ஆகியவை 2019 ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடவில்லை. இதுகுறித்து சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர், அரசு செயலரிடம் கட்சித் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.