மேலும் செய்திகள்
மதுரை- சினிமா- 11.09
6 hour(s) ago
மனிதச்சங்கிலி
6 hour(s) ago
கூட்டுறவு ஊழியருக்கு வரித்துறை பயிற்சி
10 hour(s) ago
மதுரை: மதுரை காளிகாப்பான் குமரன் நகரில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உறுப்பினர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பாஸ்கரன் வரவேற்றார். குழந்தைகள் ரூபன், நலினா, செழியன், பாரதி ஆகியோர் புங்கை மரக்கன்றுகளை நட்டினர். அஞ்சலக பணியாளர் பிரேம் நன்றி கூறினார். கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவடைந்த பகுதிகளில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அகழாய்வுக்கு நிலம் நன்கொடை வழங்கிய முருகேசன் தொடங்கி வைத்தார். அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் பேசுகையில், ‘‘2,600 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகள், தமிழர்களின் வாழ்க்கை முறை சான்றுகள் கிடைத்த இடத்தில் மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சி’’ என்றார். இயற்கை ஆர்வலர் ரமேஷ்குமார், ‘எம்மால் இயன்றது’ அமைப்பின் கண்ணன், தருன் உட்பட பலர் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
10 hour(s) ago