உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கு: ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கு: ஆயுள் தண்டனை

மதுரை; மதுரை காமராஜபுரம் சுப்பிரமணியன் 68. சுமை துாக்கும் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் 2021ல் வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.நீதிபதி முத்துக்குமாரவேல்: சுப்பிரமணியனுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை (இயற்கை மரணம் அடையும்வரை அனுபவிக்க வேண்டும்), ரூ.6000 அபராதம் விதிக்கப்படுகிறது. சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ