உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கொத்தனார் பலி சோழவந்தான்: விக்கிரமங்கலம் தெய்வம் 47, கொத்தனாரான இவர், பணி முடிந்ததும் போதையில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து விட்டார். நேற்று அதிகாலை வாகனம் ஒன்று தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். முகமூடி கொள்ளையர் வழிப்பறி கள்ளிக்குடி: உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் 26. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலைக்காக டூவீலரில் சென்றபோது கூடக்கோவில் கண்மாய் பகுதியில் முகவரி கேட்பது போல் முகத்தை கர்சீப்பால் மூடியபடி இருந்த 3 பேர் டூவீலரை நிறுத்தி பணம், அலைபேசியை கேட்டனர். அவரிடம் இல்லாததால் டூவீலரை வழிப்பறி செய்தனர். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை