சேவை மையம் திறப்பு
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி சுவாமிநாதன் நகரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு த.வெ.க., சார்பில் இலவச இ-சேவை மைய திறப்பு விழா நடந்தது. நிர்வாகி ராஜ் தலைமை வகித்தார். மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கபாண்டி சேவை மையத்தை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வார்டு நிர்வாகி கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.