உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குழந்தைகளுக்கு  திறன் பயிற்சி

 குழந்தைகளுக்கு  திறன் பயிற்சி

மதுரை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின், உயர்கல்வி உதவித்தொகை பெறும் குழந்தைகளுக்கு கோர் ஜாவா, நெட், பைதான் வெப் டெவலப்மென்ட், ஏ.ஐ. உள்ளிட்ட 40 பிரிவு படிப்புகளுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின், 2025 சுதந்திர தின உரையில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கஜணன் இ-ஸ்டேட்ஸ் நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. குழந்தைகள் விருப்பக் கடிதத்தை மதுரை, எல்லீஸ் நகர், வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மூலமாக வழங்கலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ