எஸ்.எல்.சி.எஸ். மாணவிகள் ஏ.சி.சி.ஏ. தேர்வில் வெற்றி
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.) மாணவிகள் ஏ.சி.சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றனர்.இக்கல்லுாரியில் பி.காம் பயிலும் மாணவிகள் இலக்கியா, சுவாதி. இருவரும் உலக அளவிலான அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் சர்டிபைடு அக்கவுண்டண்ட்ஸ் (ஏ.சி.சி.ஏ.,) பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குரு பாஸ்கர், டீன் பிரியா, துறைத்தலைவர் செல்வராஜ் பாராட்டினர்.