பட்டியலின ஆணைய மாநில தலைவர் விசாரணை
மதுரை: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவர் பஞ்சமி நில பிரச்னை தொடர்பாக சிலரால் நவ.18ம் தேதி வெட்டப்பட்டார். இரு கைகளும் வெட்டுப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தேசிய பட்டியலினத்தவர் கமிஷன் தமிழக தலைவர் ரவிவர்மன் மதுரை அரசு மருத்துவமனை சென்று நேரில் விசாரித்தார். மருத்துவமனை நிலைய அலுவலர் சரவணன் உடன் இருந்தார்.