உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை

மதுரை: மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவரது 15 வயது மூத்த மகன் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். சில நாட்களாக பெற்றோர் உட்பட யாரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று காலை பெற்றோர் குலதெய்வ கோயிலுக்கு சிவகங்கை சென்ற நிலையில் துப்பாக்கியால் தன்னைத்தானே நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை