உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடம் குறித்து ஆய்வு

ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடம் குறித்து ஆய்வு

திருமங்கலம்,: திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர், நீதிமன்றம் சார்பு நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம், திருமங்கலம் கிளை சிறை, கருவூலம் என 4 ஏக்கர் பரப்பளவில் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க 5 ஏக்கர் இடம் தேவை. இதற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை உரிய இடம் கிடைக்கவில்லை.தற்போதுள்ள நீதிமன்ற கட்டடத்தின் பின்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் உள்ளது. மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் நேற்று ஆய்வு செய்தார். வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி