உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடை கொண்டாட்டம் நிறைவு

கோடை கொண்டாட்டம் நிறைவு

மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் கோடை கொண்டாட்டம் நிறைவு விழா முதன்மை நுாலகர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை முதன்மை நுாலகர் சந்தான கிருஷ்ணன் வரவேற்றார். கோடைக் கொண்டாட்டம் அறிக்கையை நுாலகர் ஜெபஜோஸ்லின் சமர்ப்பித்தார். குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி நுாலகத்தை நோக்கி ஈர்க்கவும், விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், மே மாதத்தற்கான பல்வேறு நிகழ்ச்சிகள், பயிற்சிகள், பெண்களுக்கான அழகுக்கலை, உடல், மனநலப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் 3806 குழந்தைகள், பயிற்சிகளில் 380 குழந்தைகள், 86 பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சித்ரா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உதவி நுாலகர் அங்கமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை