உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாறலுடன் நின்ற மழை

துாறலுடன் நின்ற மழை

மதுரை: மதுரையில் நேற்று காலை முதல் இடைவேளை விட்டு துாறலுடன் மழை பெய்தது.நேற்று முன்தினம் 16.55 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக வாடிப்பட்டியில் 62 மி.மீ., மழை பெய்தது. சோழவந்தான் 50, கள்ளந்திரி 24, பெரியபட்டி 20.6, குப்பணம்பட்டி 20, சிட்டம்பட்டி 14.4, இடையபட்டி 12, தனியாமங்கலம் 12, மேலுார் 12, உசிலம்பட்டி 10, சாத்தையாறு அணை 8, தல்லாகுளம் 7.6, புலிப்பட்டி 7.4, மதுரை வடக்கு 5.8, விரகனுார் 4.2, ஏர்போர்ட் 3.6, திருமங்கலம் 3.4, பேரையூர் 2.6, எழுமலை 0.8 மி.மீ., மழை பதிவானது.முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 120.8 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 2786 மில்லியன் கனஅடி, அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 531, வெளியேற்றம் வினாடிக்கு 967 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 55.28 (மொத்த உயரம் 71 அடி), நீர் இருப்பு 2764 மில்லியன் கனஅடி, நீர் வரத்து வினாடிக்கு 1242, வெளியேற்றம் வினாடிக்கு 969 கனஅடி.சாத்தையாறு அணை நீர்மட்டம் 18.3 அடி (மொத்த உயரம் 29 அடி), நீர் வரத்து வினாடிக்கு 8 கனஅடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ