ரயில் புறப்பட்டது நகை பறிபோனது
மதுரை: சேலம் ராஜராஜேஸ்வரி 36. மும்பை - நாகர்கோவில் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் குடும்பத்தினருடன் திருநெல்வேலி வரை பயணம் மேற்கொண்டார். ரயில் நேற்று அதிகாலை 4:22 மணிக்கு மதுரை ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரம் வந்தது. 4:35 மணிக்கு புறப்பட்ட போது ஜன்னலோரம்(சைடு பெர்த்) படுத்திருந்த அவரது 6 பவுன் தாலிச் செயினை ஒருவர் பறித்துச் சென்றார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.