திருமங்கலம் மாணவர்கள் கராத்தேவில் சாதனை
திருமங்கலம்: கோவாவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று திருமங்கலம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.உலக பாரம்பரிய சோட்டாகான் கராத்தே சம்மேளனம் சார்பில் 23 வது தேசிய கராத்தே போட்டிகள் கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் திருமங்கலத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட இவர்கள் 5 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என 27 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். பயிற்சியாளர்களுக்கான பிரிவில் சென்சாய் கண்ணன் ,சண்டை பிரிவில் தங்கம் வென்றார். சென்சாய் பொன்னுச்சாமி, சென்சாய் திருப்பதி ஆகியோரும் பதக்கங்களை வென்றனர்.நேற்று திருமங்கலம் வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.