உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முப்பெரும் விழா

முப்பெரும் விழா

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க 12ம் ஆண்டு விழா, தைப்பூச விழா, அன்னதானம் நடந்தது. நிர்வாகி பூங்காவனம் தலைமை வகித்தார். நிர்வாகி சாந்தி முன்னிலை வகித்தார். தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்து, அருள் விளக்கு ஏற்றினார். நகர்வலம் வந்த அலங்கரித்த வள்ளலார் படத்திற்கு நிர்வாகி நீலமேகம் ஆராதனை செய்தார். உதவி செயலாளர் நாகையன் தலைமையில் அகவல் படிக்கப்பட்டு, ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகிகள் மாதவன், குருவாயூரப்பன், ஆதிமூலம் அன்னதானம் வழங்கினர். செயலாளர் நல்லுச்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை