உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போக்குவரத்து விழிப்புணர்வு

 போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை: மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., பாலமுருகன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'போக்குவரத்து விதிகள் தெரிந்தே மீறப்படுகின்றன. வளைவில் முந்துதல், அதீத வேகத்தில் செல்லுதல் போன்றவற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. விதிகளை பின்பற்றி 'சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவது அவசியம்' என்றார். வாகன ஆய்வாளர் சுந்தரராஜன் உடன் இருந்தார். சிகிச்சை முகாம் இந்த அலுவலகத்தில் வாசன் கண்மருத்துவமனை சார்பில் நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., பாலமுருகன் துவக்கி வைத்தார். வாகன ஆய்வாளர் சுந்தரராமன் உட்பட பலர் பங்கேற்றனர். 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். 12 பேருக்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ