உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / த.வெ.க.,வினர் முன்ஜாமின் மனு

த.வெ.க.,வினர் முன்ஜாமின் மனு

மதுரை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்., 27 ல் த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை தாக்கியதாக பதிவான வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கவுதம் தனசேகர், அன்புமணி, செந்தில்குமார், சுப்பிரமணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அவகாசம் கோரப்பட்டது. வழக்கை நீதிபதி நவ.,3க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி