வண்ணப்பூ மத்தாப்பூ
வானில் ஒரு வர்ணஜாலம்
பாரதத்தின் பண்பாட்டுத் திருவிழாவான தீபாவளித் திருநாளில் மக்களின் இரவு நேர கொண்டாட்டத்தால் மதுரை நகரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. காரிருள் வேளையில் வான்வெளி மீதினில் மத்தாப்பூ, பட்டாசு பொறிகளின் வண்ணச் சிதறல்கள், நட்சத்திரங்களுக்குப் போட்டியாக பறந்து பரவியது பார்ப்போரின் கண்களுக்கும், மனங்களுக்கும் ஒருசேர பரவசமூட்டியது. இடம்: வைகை தென்கரை