உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காந்தியின் உருவப்படங்கள் மற்றும் நினைவிடங்களில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக காந்தி பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:துணிச்சலும், எளிமையும் கொண்டு மாற்றத்திற்கான கருவியாக செயல்பட்டவர் காந்தி. மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறையாக சேவை மற்றும் இரக்கத்தின் சக்தியை அவர் நம்பினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அவரது பாதையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மனிதன்
அக் 02, 2025 16:40

என்னென்னா.. பாருங்க...


Field Marshal
அக் 02, 2025 13:30

அவர் இல்லாத நிலையில் யோகி பாதை தான் சரிப்பட்டு வரும்


மனிதன்
அக் 02, 2025 16:42

முற்றும் துறந்தவர்தான் யோகி... இது நெஞ்செல்லாம் வஞ்சம் கொண்டலையும் கபோதி...


joe
அக் 02, 2025 11:53

அவர்களின் பாதையை பின்பற்றுவோம் இவர்களின் பாதையை பின்பற்றுவோம் என்று சொல்லி நாட்டின் விவசாயப்பொருள்களை அடுத்த நாட்டிற்கு அனுப்பாமல் நம் உபயோகத்திற்கே நாம் நம் உணவுப்பொருள்களை நாம் பயன்படுத்துவோம். கனடாவில் அளவுக்கு அதிகமான கோதுமை வீணாகிறது, அதை இங்கே கொண்டு வந்தால் கோழிப்பண்ணைகளுக்கும் நமக்கும் பயன்படுத்தலாம். தான்சானியாவிலிருந்தும் நமக்கு தேவையான உணவுப்பொருள் இருந்தால் கொண்டு வரலாம், பிரேசிலில் அமேசான் ஆற்றுப்பகுதியில் இயற்கையான நல்ல உணவுப்பொருள் தேவை என்றாலும் இங்கே கொண்டு வரலாம் .ஆனால் நம் உணவுப்பொருள்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக்கூடாது .மாறாக அவர்களுக்கு அரசாங்கம் தேவையான மான்யம் மட்டுமே வழங்கி நாட்டை காப்பாற்றவேண்டும் .இல்லை என்றால் நாட்டில் பண வீக்கத்தை அரசியல் வாதிகள் உண்டுபண்ணி ஊழலை அதிகரிக்க வழி பிறக்கும் .பணவீக்கமும் அதிகமாகும் .அரசு உயர் அதிகாரிகளும் ஊழலில் திளைப்பார்கள் .அரசியல் வாதிகளும் ஊழலில் திளைப்பார்கள் .இதுவே உறுதி . பொது மக்கள் எப்போதும் பணவீக்கத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள் .இதை அரசியல் வாதிகள் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள் .இதுதான் நாட்டில் நடந்துகொண்டியிருக்கிறது.


Rathna
அக் 02, 2025 10:46

காந்தி அவர்களின் சுய சார்பு கொள்கை போன்றவற்றை கடைபிடிப்போம்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 02, 2025 09:59

நாம் நாமாக இருப்போம், நேர்மையாக உழைத்து வாழ்வோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்போம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 02, 2025 09:58

ஹே ராம்


SUBBU,MADURAI
அக் 02, 2025 10:29

இன்று ஹேராம் என்று செல்லுகின்ற நீ பாரத் மாதாகி ஜே என்று கூவுகிற காலம் வெகு விரைவில் வரும் அப்போதுதான் உன்னால் இந்தியாவில் காலம் தள்ள முடியும்.


Mario
அக் 02, 2025 09:12

அப்போ


Ramesh Sargam
அக் 02, 2025 08:59

காந்தியின் பாதையில் செல்லும் மோடிஜியின் பாதையை பின்பற்றுவோம். மஹாத்மா காந்திக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.