உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் யாகசாலை பூஜை துவக்கம்

குன்றத்தில் யாகசாலை பூஜை துவக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று நடக்கும் மண்டலாபிஷேகத்திற்காக நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 15 முதல் மண்டல பூஜை துவங்கியது. மண்டல பூஜையின் நிறைவு, மண்டலாபிஷேகம் துவக்கமாக நேற்று மாலையில் கோயில் திருவாட்சி மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. இன்று காலை விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து மூலவர்களுக்கு அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ