உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கோவில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் கொண்டத்துார் அடுத்த வைத்தியநாதபுரம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வைத்தியநாதபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். குண்டுகள் மண்தரையில் விழுந்ததால் பாதிப்பு இல்லை.இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பண்டாரவடை நிஷாந்த் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ