உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

நாகப்பட்டினம்,:நாகையில், தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார், 40; விவசாயி. இவர், தனது தோட்டத்தில் கத்தரி செடிகளை பயிரிட்டுள்ளார், இந்த செடிகளுக்கு இடையில் கஞ்சா செடியும் வளர்த்து வந்துள்ளார்.தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீசார், தோட்டக்கலைத் துறையினருடன் சென்று 6 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். கஞ்சா செடி வளர்த்த ராஜ்குமாரை கைது செய்து, அவருக்கு கஞ்சா செடி விதை எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !