உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோடை வெயில் கொளுத்தி வருவதால் மேய்ச்சல் நிலமாக மாறி வரும் ஏரிகள்

கோடை வெயில் கொளுத்தி வருவதால் மேய்ச்சல் நிலமாக மாறி வரும் ஏரிகள்

கோடை வெயில் கொளுத்தி வருவதால் மேய்ச்சல் நிலமாக மாறி வரும் ஏரிகள்வெண்ணந்துார்:வெண்ணந்துார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக ஏரிகள் மாறி வருகின்றன. வெண்ணந்துார் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதேபோல், கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு பெய்த பருவ மழையில், வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் ஏரி, மதியம் பட்டி ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, சவுரிபாளையம் ஏரி, சேமூர் ஏரிகளில் ஓரளவு நிரம்பின. இதை பயன்படுத்தி விவசாயிகள் பல்வேறு ரக பயிர்களை சாகுபடி செய்தனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, பல ஏரிகள் முற்றிலும் வறண்டு வருகின்றன. பெரும்பாலான ஏரிகள், ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. இதனால், சேலம், நாமக்கல் பகுதியை சேர்ந்த ஆடு வளர்ப்போர், தங்களது பராமரிப்பில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஆடுகளை ஓட்டி வந்து, 'கிடை' அமைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !