உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் பானை விற்பனை மும்முரம்

மண் பானை விற்பனை மும்முரம்

மண் பானை விற்பனை மும்முரம்வெண்ணந்துார்:வெண்ணந்துார் பகுதியில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலுக்கு இயற்கையான, குளிர்ச்சி யான குடிநீர் வழங்கும் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. தண்ணீர் பானை, கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்திலான மண் பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம், கொள்ளளவு அடிப்படையில், 250 முதல், 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.மண்பானை தொழிலாளர்கள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண் பானை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும், 50 பானை விற்பனையாகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை