வரியினங்களில் பாக்கிடவுன் பஞ்., நடவடிக்கை
வரியினங்களில் பாக்கிடவுன் பஞ்., நடவடிக்கைநாமகிரிப்பேட்டை:'வரியினங்களை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை, சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்கள், இந்தாண்டு முடிவதற்குள் முழுவதும் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.