புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு
புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்புஅரசு பொதுத்தேர்வு நடக்கும்போது, அவற்றை புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு பிளஸ் 1 தேர்வு நடந்தபோது, புகைப்படம் எடுக்க பத்திரிகை போட்டோகிராபர்களை அனுமதிக்கவில்லை. 'கலெக்டர் ஆய்வுக்கு செல்லும்போது மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என கறாராக தெரிவித்தனர்.பின், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், தேர்வு முடியும் சமயத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.