சாம்பிராணி புகையால் தொழிலாளி பலி
சாம்பிராணி புகையால் தொழிலாளி பலிகுடியாத்தம், வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னபறவைக்கல் கிராமத்தில், கன்னி அம்மன் கோவில் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார், 40, உறவினர்கள், 15 பேருடன் கோவிலுக்கு நேற்று வந்தார். கற்பூரம் மற்றும் சாம்பிராணி ஏற்றியபோது ஏற்பட்ட புகையால், கோவில் அருகே மரத்தில் கட்டியிருந்த கூட்டிலிருந்த தேனீக்கள் பறந்து கொட்டின. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்தில் பலியானார்.