உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டுமல்லி கிலோ ரூ.350க்கு விற்பனை

குண்டுமல்லி கிலோ ரூ.350க்கு விற்பனை

குண்டுமல்லி கிலோ ரூ.350க்கு விற்பனைஎருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். சீசன் நாட்களில், இங்கிருந்து தினமும், ஐந்து டன் குண்டுமல்லி பூக்கள் நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், கடந்த, மூன்று மாதமாக இப்பகுதியில் பெய்த கடும் பனிப்பொழிவால், குண்டுமல்லி வரத்து முற்றிலும் குறைந்தது.விசேஷ நாட்களில், கிலோ, 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, பனி குறைந்து வெயில் துவங்கியுள்ளதால், குண்டுமல்லி வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரமாக, மூன்று டன் வரை பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றும், இன்றும் முகூர்த்த நாள் என்றாலும், கிலோ குண்டுமல்லி, 400 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை