மேலும் செய்திகள்
விநாயகர் சிலை விற்பனை தீவிரம்
12-Aug-2024
குமாரபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், டி.எஸ்.பி., இமயவரம்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது அவர் கூறியதாவது: சிலைகள் பீடத்துடன் சேர்த்து, 10 அடி வரை மட்டுமே இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற வேண்டும். மின் திருட்டில் ஈடுபடக்கூடாது. பிளாஸ்டிக், மற்றும் ரசாயன கலவையால் ஆன சிலைகள் வைக்க கூடாது. ஜெனரேட்டர் வைக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், சிலை அருகே வைக்க கூடாது. தீப்பற்றாத பந்தல் அமைக்க வேண்டும். பிற மதத்தினர் கோவில்கள், பள்ளிகள் அருகில் வைக்க கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அமைக்க கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகள் மட்டும் வைக்க வேண்டும். விநாயகர் ஊர்வலங்கள் பிற மத கோவில்கள் வழியாக வரக்கூடாது. விழாக்குழுவினர் பாதுகாப்பு குழு அமைத்து, சிலை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், ராம்குமார், மாதேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
12-Aug-2024